சென்னை மாகாணத்தின் முதல் பெண்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘முதல் பெண்கள்’, ‘பாதை அமைத்தவர்கள்’ நூல்கள் வெளிக்கொணர்ந்தன. அந்தப் பெண்களில் ஒருவரான ராஜம்மாள் தேவதாஸின் வாழ்க்கை வரலாற்றை, சிறாருக்கென சற்றே கற்பனை கலந்து கதை வடிவில் இந்த நூல் மூலம் சொல்லியிருக்கிறார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தை நிறுவியவர், ராஜம்மாள். சமச்சீர் உணவு மற்றும் உணவில் சிறுதானியங்கள் சேர்க்கவேண்டிய அவசியத்தை சில பத்தாண்டு முன்பே நமக்குச் சொன்னவர் ராஜம்மாள். அவரின் வாழ்க்கைக் கதையே இந்த நூல்.
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர். ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனர். சிறார் கதைசொல்லி. சிறந்த பெண்ணிய ஊடகவியலாளருக்கான லாட்லி தேசிய விருது வென்றுள்ளார். இவர் எழுதிய வடசென்னை வரலாறும் வாழ்வியலும் நூலும், இவர் எழுதி, மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் முதல் கீழடிவரை நூலும் எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயத்தின் விருதுகள் வென்றுள்ளன.