CART

Vilaga Marukkum Thiraigal | விலக மறுக்கும் திரைகள் | பா.ஜீவசுந்தரி

150.00
In stock : 10000 available

பெண் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தச் சமூகம் சார்ந்த தோழர் ஜீவசுந்தரியின் பார்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில் ‘விலக மறுக்கும் திரைகள்’ பத்தியாக 2023-ம் ஆண்டில் வெளியானது. மக்கள் நலன், எப்போதும் தொடரும் அவர்களின் பிரச்னைகள் குறித்த சிந்தனைகள், பிரச்னைகளுக்கான தீர்வுகள், சமீப ஆண்டுகளில் சில நாடுகளுக்கிடையே மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் போர் அபாயம், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், மழை வெள்ளக் காலத்தில் சென்னை படும் பாடு, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், கல்வியின் மீதான தாக்குதல்கள் என அவ்வப்போது சமூகத்தில் நிகழும் தொடர் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்தான, சமூகம் சார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். 


பா.ஜீவசுந்தரி

பா.ஜீவசுந்தரி (1963). எழுத்தாளர், ஊடகவியலாளர், பெண்ணிய ஆய்வாளர். பல்வேறு இதழ்களில் ஆசிரியப் பொறுப்புகளில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது சுதந்திர எழுத்தாளராகப் பல்தரப்பட்ட பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும், குரலற்ற பொம்மைகள், பெண் எனும் பகடைக்காய், ரசிகை பார்வை, செல்லுலாய்ட் பெண்கள் நூல்களின் ஆசிரியர். ‘தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே’ நூலின் தொகுப்பாசிரியர், மூவலூர் ராமாமிர்தத்தின் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ நூலின் பதிப்பாசிரியர். ‘ரசிகை பார்வை’ சிறந்த பெண்ணிய நூலுக்கான விருது பெற்றது. மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பெயரில் வழங்கப்படும் விருதினைத் தன் கட்டுரைக்காகப் பெற்றவர். தமுஎகசவின் மேலாண்மைப் பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருதையும் பெற்றுள்ளார்.